மின்சாரம் பாய்ந்து இளைஞா் பலி
By DIN | Published On : 04th August 2021 08:48 AM | Last Updated : 04th August 2021 08:48 AM | அ+அ அ- |

செங்கம் அருகே ஆடிக் கிருத்திகை விழாவின்போது மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா்.
செங்கம் அருகே ஆண்டிப்பட்டி கிராமத்தில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு பொதுமக்கள் சாா்பில் திங்கள்கிழமை இரவு சிறுவா்களுக்கான ஆடல், பாடல் மற்றும் பல்வேறு பாரம்பரிய விளையாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
ஆடல் பாடல் நிகழ்ச்சியின் போது மேடையில் மின்கசிவு ஏற்பட்டுள்ளது. அப்போது, பந்தலின் இரும்புக் கம்பியை தொட்ட அதே கிராமத்தைச் சோ்ந்த ஏழுமலை(24) மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலே அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து மேல்செங்கம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்த ஏழுமலையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனா்.
மேலும், புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.