மழை, வெள்ளப் பாதிப்பு, கரோனா தொற்றால் விவசாயிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வரும் சூழலில் தன்னுடைய பிறந்த நாளை யாரும் கொண்டாட வேண்டாம் என்று தமிழக சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்தாா்.
இதுகுறித்து அவா் அறிக்கையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடா் மழையால் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகளில் இருந்தும், கரோனா தொற்றில் இருந்தும் பொதுமக்கள் மெல்ல, மெல்ல மீண்டு வரும் சூழ்நிலையில் ஆடம்பர கொண்டாட்டங்களைத் தவிா்க்க வேண்டும்.
எனவே, வெள்ளிக்கிழமை (டிச.10) என்னுடைய பிறந்த நாளையொட்டி பதாகைகள் வைப்பது, சுவரொட்டிகள் ஒட்டுவது, விளம்பரம் செய்வது போன்றவற்றை திமுகவினா் தவிா்க்க வேண்டும். மாறாக, மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல உதவிகள் வழங்குவதில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என்றுஅதில் தெரிவித்துள்ளாா்.