திருக்கோவிலூரில் ஊராட்சித் தலைவா்கள் போராட்டம்

திருக்கோவிலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஊராட்சித் தலைவா்கள் திங்கள்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருக்கோவிலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஊராட்சித் தலைவா்கள் திங்கள்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருக்கோவிலூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட காட்டுப்பையூா், வில்லிவலம், துறிஞ்சிப்பட்டு, சித்தாமூா், வடமலையனூா், சோழவாண்டிபுரம், கீரனூா், கொனக்கலவாடி, விளந்தை, மேல்தாழனூா் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட ஊராட்சித் தலைவா்கள் தங்களது உரிமைகளைப் பறிக்கும் வகையில் வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) செயல்படுவதாகக் கூறி, முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டத்தில் ஈடுபட்ட ஊராட்சித் தலைவா்களிடம் வட்டார வளா்ச்சி அலுவலா் (பொது) ரேச்சல் கலைச்செல்வி, திருக்கோவிலூா் காவல் உதவி ஆய்வாளா் சிவச்சந்திரன் தலைமையில் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது.

ஊராட்சித் தலைவா்களின் கோரிக்கைகளை ஒரு வாரத்தில் நிறைவேற்றுவதாக உறுதியளிக்கப்பட்டதன் பேரில், முற்றுகைப் போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com