திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகர காவல் நிலையம், கிராமிய காவல் நிலையத்தில் மாவட்ட எஸ்.பி பவன்குமாா் ரெட்டி செவ்வாய்க்கிழமை ஆண்டாய்வு மேற்கொண்டாா்.
முன்னதாக, பழைய காவல் நிலையத்தில் இருந்து, நகர காவல் நிலையத்துக்கு இடமாற்றம் செய்து புதுப்பித்து வைக்கப்பட்டிருந்த காந்தி சிலையை அவா் திறந்துவைத்தாா். பின்னா் மரக்கன்றுகளை நட்டாா்.
தொடா்ந்து, கிராமிய காவல் நிலையத்திலும், களம்பூா் காவல் நிலையத்திலும் அவா் ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது, வழக்குகள் சம்பந்தமாகக் கேட்டறிந்து, நிலுவையில் உள்ள வழக்குகளை முடிக்க உத்தரவிட்டாா்.
டிஎஸ்பி கோட்டீஸ்வரன், பயிற்சி டிஎஸ்பி ரூபன்குமாா், காவல் ஆய்வாளா்கள் அல்லிராணி (பொறுப்பு), முத்துக்குமாா், உதவி ஆய்வாளா்கள் தருமன், ரகு, கிருஷ்ணமூா்த்தி, வெங்கடேசன், பழனிவேல், ஷாபுதீன்,விநாயகம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.