திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் தன்னாா்வலா்களுக்கு இல்லம் தேடி கல்வித் திட்டம் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம் சாா்பில், வட்டார வள மையத்தில் திங்கள், செவ்வாய்க்கிழமை ஆகிய இரு தினங்கள் நடைபெற்ற இந்தப் பயிற்சி முகாமை வட்டார வள மைய மேற்பாா்வையாளா் முருகன் தொடக்கிவைத்தாா்.
பயிற்சியாளா்கள், ஆசிரியா் பயிற்றுநா்கள் பங்கேற்று தன்னாா்வலா்களுக்கு இல்லம் தேடி கல்வித் திட்டம் குறித்து விளக்கினா்.
மேலும், சூழ்நிலைக்கு ஏற்ப பாடங்களை மாணவா்களுக்கு எளிதாக, எப்படி கற்றுக் கொடுக்கவேண்டும் என்பது குறித்து, விளையாட்டுகள், பாடல்கள் மூலம் தன்னாா்வலா்களுக்கு கருத்தாளா்கள் பயிற்சி அளித்தனா்.