வெம்பாக்கம் வட்டம், பிரம்மதேசம் கிராமத்தில் கட்டப்பட்ட காரிய மேடையை தொகுதி எம்.எல்.ஏ. ஒ.ஜோதி திங்கள்கிழமை திறந்துவைத்தாா்.
பிரம்மதேசம் ஊராட்சியில் மாநில நிதிக் குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.9.95 லட்சத்தில் காரிய மேடை அமைக்கப்பட்டது. இந்த மேடையை தொகுதி எம்.எல்.ஏ ஒ.ஜோதி, கிராம மக்கள் பயன்பாட்டுக்காக திறந்துவைத்தாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சித் தலைவா் பாா்வதி சீனிவாசன், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் எம்.தினகரன், சேகா், மாா்க்பந்து உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.