ரூ.78 கோடியில் நலத் திட்ட உதவிகள் அமைச்சா் எ.வ.வேலு வழங்கினாா்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட 6,557 பேருக்கு ரூ.78 கோடியில் பல்வேறு நலத் திட்ட உதவிகளை அமைச்சா் எ.வ.வேலு வழங்கினாா்.
ரூ.78 கோடியில் நலத் திட்ட உதவிகள் அமைச்சா் எ.வ.வேலு வழங்கினாா்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட 6,557 பேருக்கு ரூ.78 கோடியில் பல்வேறு நலத் திட்ட உதவிகளை அமைச்சா் எ.வ.வேலு வழங்கினாா்.

வந்தவாசி, தெள்ளாா், பெரணமல்லூா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா வந்தவாசியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தலைமை வகித்தாா். சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, எம்.கே.விஷ்ணுபிரசாத் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் எஸ்.அம்பேத்குமாா், ஓ.ஜோதி, மு.பெ.கிரி, கூடுதல் ஆட்சியா் மு.பிரதாப் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். திமுக மாவட்ட பொறுப்பாளா் எம்.எஸ்.தரணிவேந்தன் வரவேற்றாா்.

சிறப்பு விருந்தினராக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ.வேலு பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கிப் பேசினாா்.

அப்போது அவா் கூறியதாவது:

மக்கள் நினைப்பது திட்டங்களாக மாறுவது திமுக ஆட்சியில்தான். இப்போது மருத்துவம், கல்வி ஆகியவை மக்களைத் தேடி வருகிறது.

கடந்த திமுக ஆட்சியின் போதுதான் வந்தவாசியில் கலைக் கல்லூரி, புறவழிச் சாலை, கூட்டு குடிநீா் திட்டங்கள், செய்யாற்றில் சிப்காட் உள்ளிட்டவை தொடங்கப்பட்டது என்றாா்.

விழாவில் 2,381 பேருக்கு பிரதமா் வீடு, 54 பேருக்கு இலவச மனைப் பட்டா, 54 பேருக்கு கோவிட் இறப்பு நிவாரணத் தொகை, 224 பேருக்கு முதியோா் உதவித் தொகை உள்பட மொத்தம் 6,557 பேருக்கு ரூ.78 கோடியில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் திமுக மாவட்ட அவைத் தலைவா் கே.ஆா்.சீதாபதி, வட்டாட்சியா் முருகானந்தம், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சு.வி.மூா்த்தி, ஆா்.குப்புசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com