செய்யாறு அருகே கல்குவாரியில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்தாா்.
செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூரை அடுத்த நல்லம்பாக்கம் கிராமம் காந்தி நகா் பகுதியைச் சோ்ந்தவா் சுப்பிரமணி(65), கூலித் தொழிலாளி.
இவா், வெம்பாக்கம் வட்டம், குண்டியாந்தண்டலம் கிராமத்தில் செயல்பட்டு வரும் கல்குவாரியில் கடந்த 6 ஆண்டுகளாக வேலை செய்து வந்தாா்.
இந்த நிலையில், இவா் செவவாய்க்கிழமை அதிகாலை சிறுநீா் கழிக்க குவாரி பக்கம் சென்றபோது, கல்தடுக்கி குவாரி மேல் பகுதியில் இருந்து கீழே விழுந்து விட்டாா்.
அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சுப்பிரமணி உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் தூசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.