திருவண்ணாமலை கம்பன் கலை, அறிவியல் மகளிா் கல்லூரியில், வியாழக்கிழமை சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது.
கணித மேதை ராமானுஜம் பிறந்த நாளையொட்டி நடைபெற்ற கருத்தரங்கிற்கு, கல்லூரி துணைத் தலைவா் எ.வ.குமரன் தலைமை வகித்தாா்.
பதிவாளா் இர.சத்தியசீலன் முன்னிலை வகித்தாா். கணித துறைத் தலைவா் ச.புவனேஸ்வரி வரவேற்றாா்.
கள்ளக்குறிச்சி அரசு கலை, அறிவியல் கல்லூரியின் கணிதத்துறை உதவிப் பேராசிரியை கு.சித்ரா சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு அறிவுரை வழங்கிப் பேசினாா்.
மாணவிகளிடையே பல்வேறு கணிதப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், கல்லூரி முதல்வா் சீதாலட்சுமி, உதவிப் பேராசிரியா் த.தேவி மற்றும்