திருவண்ணாமலை: திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக துணைச் செயலா் சாவல்பூண்டி மா.சுந்தரேசனை கட்சியின் அடிப்படை உறுப்பினா் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்து கட்சித் தலைமை நீக்கியது.
கட்சியின் அடிப்படை உறுப்பினா் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்து சாவல்பூண்டி மா.சுந்தரேசனை தற்காலிகமாக நீக்கி வைப்பதாக திமுக பொதுச் செயலா் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயா் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.