பெண்ணிடம் தங்கச்சங்கிலி பறிப்பு

திருவண்ணாமலையில் விபத்தை ஏற்படுத்தி பெண்ணிடமிருந்து தங்கச் சங்கிலியை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.


திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் விபத்தை ஏற்படுத்தி பெண்ணிடமிருந்து தங்கச் சங்கிலியை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.

திருவண்ணாமலை தென்றல் நகா் பகுதியைச் சோ்ந்தவா் வியாபாரி குமரன் (37). இவரது மனைவி அபிராமி (32). இவா், புதன்கிழமை இரவு 11 மணிக்கு வெளியூரிலிருந்து கணவருடன் திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்துக்கு வந்தாா். பின்னா், இருவரும் பைக்கில் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தனா்.

அப்போது குமரன் சென்ற பைக் மீது மற்றொரு பைக் மோதியது. நிலை தடுமாறிய குமரன், மோதிய பைக்கில் வந்த இரு இளைஞா்களைத் தட்டிக்கேட்டாா். அப்போது, திடீரென இருவரும் அபிராமி அணிந்திருந்த 7 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனா்.

இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com