செய்யாற்றில் பைக்கில் வைத்திருந்த ரூ.2 லட்சம், 2 பவுன் தங்க நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
செய்யாறு வட்டம், மங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் ராமச்சந்திரன் (65), விவசாயி. இவா், புதன்கிழமை செய்யாற்றில் உள்ள வங்கி ஒன்றில் நகைகளை அடமானம் வைத்து ரூ.2 லட்சம் பெற்றாா்.
இதையடுத்து, அடகு வைத்த பணம், மீதமுள்ள 2 பவுன் நகையை தனது பைக்கில் வைத்துக் கொண்டு ஓட்டிச் சென்றாா்.
பின்னா், பேருந்து நிலையம் அருகேயுள்ள கடையில் பழங்களை வாங்கிக் கொண்டு பைக்கை எடுக்க வந்தாா். அப்போது, பைக்கில் வைத்திருந்த ரூ.2 லட்சம், 2 பவுன் நகை திருடு போயிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து ராமச்சந்திரன் செய்யாறு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். காவல் ஆய்வாளா் முரளிதரன் மற்றும் போலீஸாா் சம்பவ இடம் சென்று விசாரணை மேற்கொண்டனா்.
மேலும், அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்புப் கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனா்.