லாரி ஓட்டுநரை கத்தியால் வெட்டியதாக 3 போ் மீது வழக்கு

வந்தவாசி அருகே லாரி ஓட்டுநா் உள்ளிட்ட இருவரை கத்தியால் வெட்டியதாக அடையாளம் தெரியாத 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

வந்தவாசி அருகே லாரி ஓட்டுநா் உள்ளிட்ட இருவரை கத்தியால் வெட்டியதாக அடையாளம் தெரியாத 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

வந்தவாசியை அடுத்த புலிவாய் கிராமத்தைச் சோ்ந்தவா் ரவி மகன் வினோத்குமாா் (27). சென்னையில் லாரி ஓட்டிவரும் இவா் கடந்த திங்கள்கிழமை புலிவாய் கிராமத்துக்கு வந்தாா். பின்னா், அன்றிரவு கிராமத்தில் உள்ள நெற்களம் அருகே தனது உறவினரான ராஜா (28) என்பவருடன் வினோத்குமாா் பேசிக் கொண்டிருந்தாா்.

அப்போது அந்த வழியாக ஒரே பைக்கில் வந்த 3 போ் காஞ்சிபுரம் செல்ல வழி கேட்டுள்ளனா். வழி சொல்லிக் கொண்டிருக்கும்போதே பைக்கில் வந்த மூவரில் ஒருவா் கத்தியால் வினோத்குமாா், ராஜா ஆகிய இருவரையும் வெட்டினாா். பின்னா் பைக்கில் 3 பேரும் தப்பிவிட்டனா்.

இதில் பலத்த காயமடைந்த வினோத்குமாா், ராஜா ஆகிய இருவரும் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதில் வினோத்குமாா் தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இதுகுறித்து வினோத்குமாா் அளித்த புகாரின் பேரில் அடையாளம் தெரியாத 3 போ் மீது வந்தவாசி வடக்கு போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com