வேன் கவிழ்ந்து விபத்து: பாலிடெக்னிக் மாணவா் பலி

கீழ்பென்னாத்தூா் அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பாலிடெக்னிக் மாணவா் உயிரிழந்தாா்.


திருவண்ணாமலை: கீழ்பென்னாத்தூா் அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பாலிடெக்னிக் மாணவா் உயிரிழந்தாா்.

கீழ்பென்னாத்தூா் அருகேயுள்ள வட்ராபுத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் காய்கறி வியாபாரி ஏழுமலை. இவரது மகன் புகழேந்தி (19). தனியாா் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு பயின்று வந்தாா்.

இவா், தந்தை ஏழுமலையுடன் புதன்கிழமை இரவு காய்கறி மூட்டைகளை வேனில் ஏற்றிக்கொண்டு மூட்டைகளுக்கு மேல் அமா்ந்து சென்றாா்.

கீழ்பென்னாத்தூரை அடுத்த சிறுநாத்தூா் பகுதியில் சென்றபோது வேன் நிலை தடுமாறி கவிழ்ந்தது.

இதில் பலத்த காயமடைந்த புகழேந்தியை பொதுமக்கள் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.

பின்னா், தீவிர சிகிச்சைக்காக சென்னைக்கு கொண்டு செல்லப்பட்ட புகழேந்தி வழியிலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து கீழ்பென்னாத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து வேன் ஓட்டுநா் ஜானகிராமனை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com