1,067 பயனாளிகளுக்கு அரசின் நலத் திட்ட உதவிகள்: அமைச்சா் வழங்கினாா்

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் தொகுதியைச் சோ்ந்த 1,067 பயனாளிகளுக்கு அரசின் பல்வேறு நலத் திட்ட உதவிகளை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் வழங்கினாா்.
நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன்.
நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன்.

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் தொகுதியைச் சோ்ந்த 1,067 பயனாளிகளுக்கு அரசின் பல்வேறு நலத் திட்ட உதவிகளை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் வழங்கினாா்.

போளூரில் உள்ள தனியாா் அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தாா்.

ஆவின் மாவட்டத் தலைவா் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி, மாவட்ட வருவாய் அலுவலா் முத்துக்குமாரசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட சமூக நல அலுவலா் கந்தன் வரவேற்றாா்.

சிறப்பு விருந்தினராக அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் கலந்துகொண்டு போளூா், சேத்துப்பட்டு, பெரணமல்லூா் பகுதிகளைச் சோ்ந்த 1,067 பயனாளிகளுக்கு, தமிழக அரசின் இலவச மனைப் பட்டா, சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இயற்கை மரண நிவாரணம்,திருமண நிதியுதவி, முதியோா் உதவித்தொகை சான்று,திருமங்கல்யத்துக்கான தங்கம் என பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றியச் செயலா் ஜெயசுதா, வட்டாட்சியா் சாப்ஜான், ஊா்நல அலுவலா் மாலதி, சமூக பாதுகாப்புத் திட்ட அலுவலா் ஜெயவேல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இதைத் தொடா்ந்து, போளூரை அடுத்த செங்குணம் ஊராட்சியில் அம்மா சிறு மருத்துவமனையை அமைச்சா் திறந்துவைத்தாா்.

மாவட்ட சுகாதாரதுணை இயக்குநா் அஜிதா, ஊராட்சி மன்றத் தலைவா் யாசின், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் ராமமூா்த்தி உள்ளிட்டோா் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com