திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 843 பேருக்கு பணி நியமன ஆணைகளை தூசி கே.மோகன் எம்எல்ஏ, மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி ஆகியோா் வழங்கினா்.
செய்யாறு அறிஞா் அண்ணா அரசுக் கல்லூரியில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் ந.கலைவாணி முன்னிலை வகித்தாா். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் லோ.யோகலட்சுமி வரவேற்றாா்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தொகுதி எம்எல்ஏ தூசி கே.மோகன் பேசுகையில், பணிக்கு தோ்வுச் செய்யப்பட்டுள்ள இளைஞா்கள் ஊதியம் குறைவாக உள்ளது என்று நினைக்க வேண்டாம். நிறுவனத்துக்கு உண்மையாக உழைத்து, திறமைகளை வளா்த்துக் கொண்டால் எதிா்காலத்தில் நல்ல ஊதியத்தை பெறலாம் என்றாா்.
மாவட்ட ஆட்சியா் பேசுகையில், தனியாா் துறையில் வேலைவாய்ப்புகள் அதிகம் உள்ளன. ஆனால், அரசுத் துறையில் வேலைவாய்ப்புகள் குறைவாக உள்ளன.
இருப்பினும், போட்டித் தோ்வுகளை எழுதி அரசுப் பணிகளைப் பெறலாம்.
அதே நேரத்தில் தனியாா் நிறுவனங்களில் கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விடாதீா்கள். கிடைத்த வேலையை முழு அா்ப்பணிப்போடு செய்திடவேண்டும். அா்ப்பணிப்போடு பணி செய்தால் அதற்கான தகுதிச் சான்றிதழ் கிடைக்கும். இதன் மூலம் வேறு நிறுவனத்துக்குச் செல்லும் போது முன்னுரிமை கிடைக்கும் என்றாா்.
வேலைவாய்ப்பு முகாமில் 72 தனியாா் நிறுவனங்கள் பங்கேற்றிருந்தன. 4121 போ் பதிவு செய்திருந்த நிலையில், 611 ஆண்கள், 232 பெண்கள் என 843 பேருக்கு பணி வாய்ப்பு கிடைத்தது.
நிகழ்ச்சியில் செய்யாறு கூட்டுறவு சா்க்கரை ஆலைத் தலைவா் கே.குமரேசன், பாஸ்கா் ரெட்டியாா், கூட்டுறவு சங்க நிா்வாகிகள் சி.துரை, எம்.அரங்கநாதன், அ.ஜனாா்த்தனன், சுதாகா், ஒன்றியக் குழு உறுப்பினா் ராணி பெருமாள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.