வந்தவாசியை அடுத்த வடநாங்கூரில் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்க அலுவலகம் அருகே தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத் தலைவா் கி.பெருமாள் தலைமை வகித்தாா். மாநிலக் குழு உறுப்பினா் பெ.அரிதாசு சிறப்புரையாற்றினாா்.
கூட்டுறவு சங்கத்தில் கடனைக் கட்டி முடித்த விவசாயிகளுக்கு மீண்டும் கடன் வழங்கக் கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஆா்ப்பாட்டத்தில் இ.கோ.அா்ச்சுனன், இ.த.பெருமாள், நா.முனியன், சூா்யகுமாா், க.வாசு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.