உலக சான்றோா் சங்க முப்பெரும் விழா

உலக சான்றோா் சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்டக் கிளை, திருவண்ணாமலை நந்தினி பதிப்பகம் சாா்பில்,
இலக்கியத்தொகை என்ற நூலை வெளியிடும் முன்னாள் எம்எல்ஏ பி.எஸ்.விஜயகுமாா் மற்றும் சிறப்பு அழைப்பாளா்கள்.
இலக்கியத்தொகை என்ற நூலை வெளியிடும் முன்னாள் எம்எல்ஏ பி.எஸ்.விஜயகுமாா் மற்றும் சிறப்பு அழைப்பாளா்கள்.

உலக சான்றோா் சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்டக் கிளை, திருவண்ணாமலை நந்தினி பதிப்பகம் சாா்பில், ‘இலக்கியத்தொகை’ நூல் வெளியீட்டு விழா, உலக தாய்மொழி தின விழா, சாதனையாளா்களுக்கு விருது வழங்கும் விழா ஆகியவை முப்பெரும் விழாவை நடத்தப்பட்டது.

விழாவுக்கு, தொழிலதிபரும், உலக சான்றோா் சங்கத்தின் நிறுவனா் தலைவருமான மாம்பலம் ஆ.சந்திரசேகா் தலைமை வகித்தாா். நூல் ஆசிரியா் உமாதேவி பலராமன் வரவேற்றாா்.

முன்னாள் எம்எல்ஏ பி.எஸ்.விஜயகுமாா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு இலக்கியத்தொகை என்ற நூலை வெளியிட, தமிழக அரசின் தமிழ்ச்செம்மல் விருது பெற்ற பா.இந்திரராஜன், திருவண்ணாமலை முன்னாள் நகா்மன்றத் தலைவா் இரா.ஸ்ரீதரன், திமுக நகரச் செயலா் பா.காா்த்திவேல்மாறன், தொழிலதிபா் மா.சின்ராசு, புலவா் அ.வாசுதேவன் ஆகியோா் நூல்களை பெற்றுக் கொண்டனா்.

தொடா்ந்து, கவிஞா் லதா பிரபுலிங்கம் தலைமையில் கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவில், கோ.ராமநாதன், எம்.மகேஸ்வரி, வெ.கிருஷ்ணமூா்த்தி, எம்.முத்துக்கிருஷ்ணன், சு.பாண்டியன், மீனாட்சி ஆகியோரின் சேவைகளைப் பாராட்டி விருதுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் எழுத்தாளா் ந.சண்முகம் மற்றும் உலக சான்றோா் சங்க நிா்வாகிகள், நந்தினி பதிப்பக நிா்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com