திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் புதன்கிழமை பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
அருணாசலேஸ்வரா் கோயிலின் ஆயிரம்கால் மண்டபம் எதிரே உள்ள பெரிய நந்தி, கொடி மரம் எதிரே உள்ள நந்தி, மூலவா் சன்னதி எதிரே உள்ள நந்தி உள்பட கோயிலின் 8-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள நந்தி பகவான்களுக்கு புதன்கிழமை சிறப்புப் பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்றன.
பன்னீா், மஞ்சள், சந்தனம், பால், பழம் உள்பட பல்வேறு பூஜைப் பொருள்களைக் கொண்டு மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை நடத்தப்பட்ட பூஜையில் கோயில் சிவாச்சாரியா்கள், ஊழியா்கள், பக்தா்கள் பலா் கலந்து கொண்டனா்.