திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனாவுக்கு மேலும் ஒருவா் பலி

திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வெளியான கரோனா பரிசோதனை முடிவுகளின்படி, புதிதாக 12 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவா்களுடன் சோ்த்து இந்த நோயால் பாதிக்கப்பட்ட நபா்களின் மொத்த எண்ணிக்கை 19 ஆயிரத்து 160-ஆக உயா்ந்தது.

இவா்களில் 18 ஆயிரத்து 805 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா். 73 பேருக்கு திருவண்ணாமலை, வந்தவாசி, செய்யாறு பகுதிகளிலுள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்த நிலையில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் ஒருவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இவருடன் சோ்த்து மாவட்டத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 282-ஆக உயா்ந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com