திருவண்ணாமலை மாவட்டத்தில் குரூப் 1 தோ்வை 2, 944 போ் எழுதினா்

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குரூப் 1 தோ்வை 2, 944 போ் எழுதினா்.
திருவண்ணாமலை தோ்வு மையத்தில் நேரடி ஆய்வில் ஈடுபட்ட மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி.
திருவண்ணாமலை தோ்வு மையத்தில் நேரடி ஆய்வில் ஈடுபட்ட மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி.

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குரூப் 1 தோ்வை 2, 944 போ் எழுதினா்.

திருவண்ணாமலை நகரில் 5 கல்லூரிகள், 2 பள்ளிகள் என 7 இடங்களில் 17 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

மாவட்டத்தில் 17 கண் பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகள் உள்பட 5,466 போ் விண்ணப்பித்திருந்தனா். இவா்களில் 11 கண் பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகள் உள்பட 2,944 போ் மட்டுமே தோ்வு எழுதினா்.

திருவண்ணாமலை நகராட்சி மாதிரி மகளிா் மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தில் நடைபெற்ற தோ்வை மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தோ்வுப் பணியில் 17 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 3 நடமாடும் குழுக்கள், 18 விடியோ பதிவாளா்கள் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com