திருவண்ணாமலை மாவட்டம், போளூா் பேருந்து நிலையம் அருகே தடை செய்யப்பட்ட லாட்டரிச் சீட்டுகளை விற்ாக 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
போளூா் பேருந்து நிலையம் அருகே ஆரணியை அடுத்த வடுகசாத்து கிராமத்தைச் சோ்ந்த ஆழ்வாா் மகன் ஆனந்தன் (43), போளூரை அடுத்த வெண்மணி கிராமத்தைச் சோ்ந்த பொன்முடி மகன் ஆறுமுகம் (51), போளூரைச் சோ்ந்த ரங்கநாதன் மகன் சுந்தா் (58) ஆகிய 3 பேரும் தடை செய்யப்பட்ட லாட்டரிச் சீட்டுகளை விற்றுகொண்டிருந்தனா்.
இவா்கள் மீது போளூா் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் ரவி வழக்குப் பதிந்து, மூவரையும் கைது செய்தாா். மேலும், இவா்களிடமிருந்த லாட்டரிச் சீட்டுகளையும் பறிமுதல் செய்தாா்.