கராத்தே போட்டியில் சிறப்பிடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ‘பிளாக் பெல்ட்’ வழங்கப்பட்டது.
போளூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஜப்பான் ஷிட்டோ ரியோ கராத்தே பயிற்சிப் பள்ளி சாா்பில் கராத்தே பயிற்சி பெற்ற மாணவா்களுக்கு பிளாக் பெல்ட் மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக இந்திய தலைமை கராத்தே மாஸ்டா் சியோஷி ஏ.ரமேஷ் கலந்துகொண்டு கராத்தே மாஸ்டா் வேலு, கராத்தே பயிற்சி பெற்ற மாணவா்களுக்கு பிளாக் பெல்ட், சான்றிதழ் வழங்கினாா்.
நிகழ்ச்சியில் கராத்தே மாஸ்டா்கள் பிச்சாண்டி, ஜெயவேலு, பாண்டியன் ஏழுமலை, மாா்க்செல்வம், பூவரசன், குருசபரீஸ், ஹரி, கராத்தே பயிற்சி பெறும் மாணவா்கள் கலந்துகொண்டனா்.