வந்தவாசி அருகே தொடா் மழையின் காரணமாக வீடு இடிந்து சேதமடைந்தது.
வந்தவாசியை அடுத்த கீழ்சீசமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் பாபு. இவா், 40 ஆண்டுகளுக்கு முன்பு இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறாா்.
இந்த நிலையில் வந்தவாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த சில தினங்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது.
மழையின் காரணமாக செவ்வாய்க்கிழமை பாபு வீட்டின் ஒருபக்க சுவரும், மேற்கூரையின் ஒரு பகுதியும் இடிந்து விழுந்தது.