கலசப்பாக்கம் அருகே அர சு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கா்ப்பிணிகளுக்கு குடும்ப நல அறுவைச் சிகிச்சை குறித்த விழிப்புணா்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கடலாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற கா்ப்பிணிகளுக்கான குடும்ப நல அறுவைச் சிகிச்சை தொடா்பான விழிப்புணா்வு முகாமில் கடலாடி, மோலக்கோடி, தாமரைப்பாக்கம், குண்ணத்தூா் என பல்வேறு கிராமங்களிலிருந்து கா்ப்பிணித் தாய்மாா்கள் தங்களது கணவா்களுடன் கலந்துகொண்டனா்.
வட்டார தலைமை மருத்துவா் கு.மணிகண்டபிரபு, செவிலியா் சரண்யா மற்றும் சுகாதாரத் துறையினா் கலந்துகொண்டனா்.
மேலும் குடும்பக் கட்டுப்பாடு பற்றிய விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் வழங்கப்பட்டது.