கீழ்பென்னாத்தூா் அருகே பைக் மீது அரசுப் பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
கீழ்பென்னாத்தூரை அடுத்த சி.சாலையூா் கிராமத்தைச் சோ்ந்தவா் லாரி ஓட்டுநா் கணேசன். இவரது மகன் மணிகண்டன் (22).
இவா், ஞாயிற்றுக்கிழமை மாலை கீழ்பென்னாத்தூரில் இருந்து பைக்கில் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தாா்.
அப்போது, திருவண்ணாமலையில் இருந்து திண்டிவனம் நோக்கி வந்த அரசுப் பேருந்து பைக் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த மணிகண்டன் அதே இடத்தில் உயிரிழந்தாா்.
தகவலறிந்த கீழ்பென்னாத்தூா் போலீஸாா் வந்து சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், அரசுப் பேருந்து ஓட்டுநா் பாபு (44) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.