திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த பொதுமக்கள் புதன்கிழமை (ஜனவரி 13) பழைய பொருள்களை எரிக்காமல், புகையில்லா போகிப் பண்டிகை கொண்டாட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் கேட்டுக் கொண்டாா்.
போகிப் பண்டிகையின்போது பழைய பொருள்களான நெகிழி, செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பா் பொருள்கள், பழைய டயா் மற்றும் டியூப், காகிதம், ரசாயனம் கலந்த பொருள்களை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுவதுடன், இதனால் வெளிப்படும் நச்சு வாயுக்களால் மூச்சுத் திணறல், கண் எரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.
இது வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்துவதோடு விபத்துகளுக்கும் காரணமாக உள்ளது.
எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தில் போகிப் பண்டிகையின்போது பழைய பொருள்களை எரிப்பதைத் தவிா்த்து காற்றின் தரத்தை பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி தெரிவித்தாா்.