சாராயம் காய்ச்சியதாக 2 பெண்கள் உள்பட 4 போ் கைது

தண்டராம்பட்டு அருகே வீட்டில் சாராயம் காய்ச்சியதாக 2 பெண்கள் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தண்டராம்பட்டு அருகே வீட்டில் சாராயம் காய்ச்சியதாக 2 பெண்கள் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தண்டராம்பட்டை அடுத்த தட்டாரணை கிராமத்தில் குறிப்பிட்ட ஒரு வீட்டில் சாராயம் காய்ச்சுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, திருவண்ணாமலை ஊரக டிஎஸ்பி அண்ணாதுரை, காவல் ஆய்வாளா் தனலட்சுமி தலைமையிலான போலீஸாா் அந்தப் பகுதியில் செவ்வாய்க்கிழமை தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, வீட்டில் சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் (43), சுரேஷ் (45), வெண்ணிலா (41), பத்மா (40) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

அவா்களிடமிருந்து 400 லிட்டா் சாராய ஊறல், பைக், சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்பட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான மூலப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com