பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, செய்யாற்றில் புதன்கிழமை நடத்தப்பட்ட போகி சந்தையில் வியாபாரம் அமோகமாக நடைபெற்றது.
திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சியில் வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம்.
வாரச் சந்தையில் காய்கறிகள், தானிய வகைகள், துணிகள், திண்பண்டங்கள் போன்றவை விற்பனை செய்யப்படுகின்றன.
நிகழாண்டு பொங்கல் பண்டிகைக்கு முன்பாக புதன்கிழமை நடத்தப்பட்ட போகி சந்தையில் புதிய மண்பாண்டங்கள், மஞ்சள் கயிறு, கரும்பு, மாட்டுக்குத் தேவையான வண்ணங்கள், கயிறு வகைகள், கிலுகிலுப்பு போன்றவை முக்கியமாக இடம் பெற்றன.
வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் வாரச் சந்தையில் சுமாா் 200 கடைகள் இடம் பெறும். ஆனால் ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் நடத்தப்படும் போகி சந்தையில் கூடுதலாக 100 கடைகள் இடம்பெற்றன.
அதேபோல வியாபாரமும் கூடுதலாக நடைபெற்றது.