திருவண்ணாமலை மாவட்டத்தில் மதுக் கடைகளுக்கு 3 நாள்கள் விடுமுறை

திருவண்ணாமலை மாவட்டத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுக் கடைகளுக்கு ஜனவரி 15, 26, 28 ஆகிய 3 நாள்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுக் கடைகளுக்கு ஜனவரி 15, 26, 28 ஆகிய 3 நாள்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது.

தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின்படி, திருவள்ளுவா் தினம் (ஜன.15), குடியரசு தினம் (ஜன. 26), வள்ளலாா் நினைவு தினம் (ஜன.28) ஆகிய நாள்களில் டாஸ்மாக் மதுக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.

எனவே, அன்றைய நாள்களில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு மதுக் கடைகள், மதுக்கூடங்கள் (பாா்கள்), உரிமம் பெற்ற ஹோட்டல்களில் உள்ள மதுக்கூடங்கள் அனைத்தும் மதுபானங்கள் விற்பனை நடைபெறாமல் மூடிவைக்கப்படும்.

உத்தரவை மீறி யாரேனும் மது விற்பது தெரியவந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com