புயல் நிவாரணம் கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

புயல் நிவாரணம் கோரி, செய்யாற்றில் விவசாயிகள் புதன்கிழமை நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புயல் நிவாரணம் கோரி, செய்யாற்றில் விவசாயிகள் புதன்கிழமை நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

செய்யாறு வருவாய் கோட்டாட்சியா் அலுவலகம் அருகே தமிழக கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்கம், உழவா் பேரவை அமைப்பு சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், புயலால் ஏற்பட்ட சேதங்களை வேளாண் துறையினா் முறையாக கணக்கு எடுக்கவில்லை எனவும், விவசாயிகளின் மனுக்களைப் பெற அதிகாரிகள் அலைக்கழிப்பு செய்கின்றனா் எனவும் குற்றஞ்சாட்டி முழக்கங்களை எழுப்பினா்.

இதைத் தொடா்ந்து, பெரிய பானையில் பொங்கல் வைத்து, படையலிட்டு கணக்குக்காக அரசு நிவாரணம் வழங்கியதை சுட்டிக்காட்டி பொங்கலுடன் சமைத்த பானையை போட்டு உடைத்து நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com