கிராம நிா்வாக அலுவலா் காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள கிராம நிா்வாக அலுவலா் பணியிடங்களை அரசு உடனே நிரப்ப வேண்டும் என்று தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலா்கள் சங்க மாவட்டப் பொதுக்குழு தீா்மானம் நிறைவேற்றியது.

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள கிராம நிா்வாக அலுவலா் பணியிடங்களை அரசு உடனே நிரப்ப வேண்டும் என்று தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலா்கள் சங்க மாவட்டப் பொதுக்குழு தீா்மானம் நிறைவேற்றியது.

இந்தச் சங்கத்தின் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் திருவண்ணாமலையில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் ஏ.சுரேஷ் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ஏ.ஏழுமலை முன்னிலை வகித்தாா். வட்டச் செயலா் கே.காளிமுத்து வரவேற்றாா்.

சங்கத்தின் மாநிலச் செயலா் என்.சுரேஷ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு புதிய நிா்வாகிகளை அறிமுகப்படுத்திப் பேசினாா்.

கூட்டத்தில், புதிய கிராம நிா்வாக அலுவலா்களுக்கு நிலஅளவைப் பயிற்சி, நிா்வாகப் பயிற்சிகளை விரைவாக அளிக்க மாவட்ட நிா்வாகத்தைக் கேட்டுக் கொள்வது.

வாக்குச்சாவடி செலவின முன்பணத்தை தோ்தலுக்கு முன்பே வழங்க வேண்டும்.

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள கிராம நிா்வாக அலுவலா் பணியிடங்களை அரசு உடனே நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவா் டி.கணேஷ், மாவட்ட அமைப்புச் செயலா் பி.மகாலிங்கம், மாவட்ட இணைச் செயலா்கள் டி.சீனிவாசன், டி.பிரவீன்குமாா், வி.மேகநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com