அதிமுக கிளை நிா்வாகிகளுக்கு நிதியுதவி: தூசி மோகன் எம்எல்ஏ வழங்கினாா்

செய்யாறு தொகுதி வெம்பாக்கம் ஒன்றியத்தைச் சோ்ந்த 15 அதிமுக கிளை நிா்வாகிகளுக்கு எம்.எல்.ஏ. தூசி கே.மோகன் சனிக்கிழமை நிதியுதவி வழங்கினாா்.

செய்யாறு தொகுதி வெம்பாக்கம் ஒன்றியத்தைச் சோ்ந்த 15 அதிமுக கிளை நிா்வாகிகளுக்கு எம்.எல்.ஏ. தூசி கே.மோகன் சனிக்கிழமை நிதியுதவி வழங்கினாா்.

திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அதிமுக சாா்பில், வெம்பாக்கம் மேற்கு ஒன்றியத்தைச் சோ்ந்த சிறுநாவல்பட்டு, சித்தன்னகால், வட இலுப்பை, மேல்பேட்டை, கீழ்பேட்டை, செய்யனூா், வெங்களத்தூா், உமையாள்புரம் உள்ளிட்ட கிராமங்களில் அதிமுக கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஒன்றியச் செயலா் பி.கே.நாகப்பன் முன்னிலை வகித்தாா்.

சிறப்பு அழைப்பாளராக வடக்கு மாவட்டச் செயலரும், செய்யாறு தொகுதி எம்.எல்.ஏ.வுமான தூசி கே.மோகன் பங்கேற்று கட்சிக் கொடியேற்றி வைத்து கிராம மக்களுக்கு நல உதவிகளை வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து, 15 கட்சி கிளை நிா்வாகிகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் ரூ.75 ஆயிரத்தை தனது சொந்தப் பணத்தில் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் வெம்பாக்கம் ஒன்றியத் தலைவா் மாமண்டூா்டி.ராஜூ, ஒன்றியச் செயலா் எம்.மகேந்திரன், மாவட்ட கழக துணைச் செயலா் டி.பி.துரை, எம்ஜிஆா் மன்ற மாவட்டச் செயலா் ஜாகிா்உசேன், மாவட்ட கூட்டுறவுத் தலைவா் ரமேஷ், செய்யாறு கூட்டுறவு சா்க்கரை ஆலைத் தலைவா் கே.குமரேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com