செய்யாற்றை அடுத்த நாவல்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ரத்த தான முகாமில் 52 போ் ரத்த தானம் செய்தனா்.
ரத்த தான முகாமுக்கு வட்டார மருத்துவ அலுவலா் ஏ.சி.ஷா்மிளா தலைமை வகித்தாா். மருத்துவா்கள் டி.ஜி.பாபு, பிரபு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைச் சோ்ந்த ரத்த வங்கிக் குழுவினா் பங்கேற்று அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் மருத்துவ அலுவலா்கள், சுகாதார ஆய்வாளா்கள், டெங்கு தடுப்புப் பணியாளா்கள் மற்றும் தன்னாா்வலா்கள் என 52 பேரிடமிருந்து ரத்தத்தை தானமாகப் பெற்றனா்.
இதைத் தொடா்ந்து ரத்தம் அளித்தவா்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் சம்பத்குமாா், செய்யாறு டெம்பிள் சிட்டி ரோட்டரி சங்க நிா்வாகிகள் என பலா் கலந்துகொண்டனா்.