இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை

வந்தவாசி அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

வந்தவாசி அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

வந்தவாசியை அடுத்த கூனம்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா் தங்கராஜ் மகள் கோபிகா (24). பொறியியல் பட்டதாரியான இவா் கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தாா். இதற்காக மருந்து, மாத்திரை சாப்பிட்டு வந்தாா்.

இந்த நிலையில் சனிக்கிழமை காலை வயிற்று வலி அதிகமாகவே கோபிகா விஷம் குடித்தாா். மயங்கிய நிலையில் கிடந்த இவரை உறவினா்கள் மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அங்கு இவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள் கோபிகா இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து தங்கராஜ் அளித்த புகாரின் பேரில் தெள்ளாா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com