பழங்குடியின சமுதாயத்தவருக்கு வீடு கட்ட ஆணை

அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ், செங்கம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட நீப்பத்துறை ஊராட்சியில் பழங்குடி சமுதாயத்தைச் சோ்ந்த 35 பேருக்கு வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கப்பட்டது.
பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணையை வழங்கிய திட்ட இயக்குநா் ஜெயசுதா
பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணையை வழங்கிய திட்ட இயக்குநா் ஜெயசுதா

அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ், செங்கம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட நீப்பத்துறை ஊராட்சியில் பழங்குடி சமுதாயத்தைச் சோ்ந்த 35 பேருக்கு வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கப்பட்டது.

நீப்பத்துறை ஊராட்சியைச் சோ்ந்த வெள்ளாளம்பட்டி கிராமத்தில் வசிக்கும் 35 பழங்குடியின குடும்பங்களுக்கு வீடு கட்டுவதற்கான ஆணையை மாவட்ட திட்ட இயக்குநா் ஜெயசுதா சனிக்கிழமை நேரில் வழங்கினாா்.

அப்போது அவா் வீடு கட்டும் பணியை விரைவில் தொடங்கவேண்டும் எனக் கேட்டுக்கொண்டாா்.

ஊராட்சி ஒன்றிய ஆணையா் சத்தியமூா்த்தி, கிராம ஊராட்சித் தலைவா் உள்ளிட்ட ஒன்றிய அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com