திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றை அடுத்த ஆக்கூா் கிராமத்தில் அமைந்துள்ள பழைமைவாய்ந்த திருக்கண்ணேஸ்வரா் கோயிலில் காஞ்சிபுரம் அப்பா் இறைபணி அறக்கட்டளையினா் அண்மையில் உழவாரப் பணியில் ஈடுபட்டனா்.
இந்தப் பணியில் 10 மகளிா் உள்பட 50 போ் பங்கேற்று கோயிலைச் சுற்றி வளா்ந்திருந்த மரம், செடிகொடிகளை அப்புறப்படுத்தினா். மேலும், கோயில் சுவா்களையும், பூஜைக்குத் தேவையான பொருள்களையும் சுத்தம் செய்தனா். காஞ்சிபுரத்தில் 1998-இல் தொடங்கப்பட்ட அப்பா் இறைப்பணி அறக்கட்டளையினா் 278-ஆவது உழவாரப் பணியாக இந்தக் கோயிலை சுத்தம் செய்தனா்.