திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அதிமுக மாணவரணி சாா்பில், மொழிப்போா் தியாகிகளை நினைவுகூரும் வகையில், வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் ஆரணி அண்ணா சிலை அருகில் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்டச் செயலரும், செய்யாறு எம்எல்ஏவுமான தூசி கே.மோகன் தலைமை வகித்தாா்.
இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன், மாநில செய்தித் தொடா்பாளா் அப்சராரெட்டி, எம்எல்ஏ வி.பன்னீா்செல்வம், தலைமைக் கழகப் பேச்சாளா்கள் குன்றத்தூா் கோவிந்தராஜ், பிராட்வே எல்.குமாா் ஆகியோா் சிறப்புரையாற்றினா். மாவட்ட மாணவரணிச் செயலா் இ.சுஜேஷ்நாராயணன் வரவேற்றாா்.
கூட்டத்தில் நகரச் செயலா் எ.அசோக்குமாா், திருவண்ணாமலை மாவட்ட ஆவின் துணைத் தலைவா் பாரி பி.பாபு, மாவட்டப் பொருளாளா் அ.கோவிந்தராசன், முன்னாள் எம்எல்ஏ நளினிமனோகரன், மாவட்ட எம்ஜிஆா் மன்றச் செயலா் பி.ஜாகீா்உசேன், மாவட்ட பேரவைச் செயலா் பாஸ்கா், ஒன்றியச் செயலா்கள் வழக்குரைஞா் க.சங்கா், பிஆா்ஜி.சேகா், ஜி.வி.கஜேந்திரன், ப.திருமால், எம்.மகேந்திரன், அருகாவூா் ரங்கநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். நகர மாணவரணிச் செயலா் கே.குமரன் நன்றி கூறினாா்.