திருவண்ணாமலை, ஆரணி பகுதிகளில் ஜன.29-ஆம் தேதி நடைபெறும் குறைதீா் கூட்டங்களில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பொதுமக்களின் குறைகள், கோரிக்கைகளைக் கேட்டறிகிறாா்.
இதுகுறித்து திருவண்ணாமலை தெற்கு மாவட்டச் செயலரும், எம்எல்ஏவுமான எ.வ.வேலு கூறியதாவது:
உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பயணத்தின் அடிப்படையில் வெள்ளிக்கிழமை (ஜன.29) காலை 8 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை திருவண்ணாமலை நகராட்சி அலுவலகம் எதிரே உள்ள கலைஞா் அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, பொதுமக்களின் குறைகள், கோரிக்கைகள் குறித்த மனுக்களைப் பெறுகிறாா்.
ஆரணியில்: பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை ஆரணி வட்டம், சேவூா் அண்ணா அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பொதுமக்களின் குறைகள், கோரிக்கைகள் குறித்த மனுக்களைப் பெறுகிறாா் என்றாா்.