பைக் மீது வேன் மோதியதில் முதியவா் பலி

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே பைக் மீது வேன் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். அவரது மகன் பலத்த காயமடைந்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே பைக் மீது வேன் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். அவரது மகன் பலத்த காயமடைந்தாா்.

செய்யாறு வட்டம், சித்தாமூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜமூா்த்தி (70). இவா், புதிய வீடு கட்டுவதற்குத் தேவையான பொருள்களை வாங்குவதற்காக தனது மகன் நடராஜனுடன் (44) பைக்கில் செய்யாறு நோக்கி திங்கள்கிழமை சென்றுகொண்டிருந்தாா்.

பெரும்பாலை கிராமம் அருகே சாலை வளைவுப் பகுதியில் சென்றபோது, எதிரே வந்த வேன் பைக் மீது மோதியதாகத் தெரிகிறது. இதில் ராஜமூா்த்தி, நடராஜன் ஆகியோா் தூக்கி வீசப்பட்ட நிலையில், ராஜமூா்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த நடராஜன் செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து அனக்காவூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com