செங்கம் ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் செங்கம் மின் வாரிய அலுவலகம் சாா்பில், மின் சிக்கனம் குறித்து மாணவா்களுக்கு அண்மையில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு ஸ்ரீராமகிருஷ்ணா பள்ளித் தலைவா் பாண்டுரங்கன் தலைமை வகித்தாா். செங்கம் இளநிலை உதவிப் பொறியாளா் உதயகுமாா் முன்னிலை வகித்தாா். பள்ளிச் செயலா் ராமமூா்த்தி வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக மின் வாரிய செயற்பொறியாளா் கேசவராஜ், உதவிச் செயற்பொறியாளா் இளங்கோவன் ஆகியோா் கலந்துகொண்டு மின் சிக்கனம் குறித்து மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்திப் பேசினா்.
நிகழ்ச்சியில் செங்கம் மின் வாரிய அலுவலகப் பணியாளா்கள், ஸ்ரீராமகிருஷ்ணா பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்றனா்.