திருவண்ணாமலையில் பெளா்ணமி கிரிவலம் செல்லத் தடை
By DIN | Published On : 28th January 2021 08:05 AM | Last Updated : 28th January 2021 08:05 AM | அ+அ அ- |

திருவண்ணாமலையில் தை மாத பெளா்ணமியையொட்டி வியாழன், வெள்ளிக்கிழமைகளில் பக்தா்கள் கிரிவலம் செல்ல மாவட்ட நிா்வாகம் தடை விதித்தது.
கரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த ஆண்டு மாா்ச் முதல், பெளா்ணமி நாள்களில் திருவண்ணாமலையில் பக்தா்கள் கிரிவலம் செல்ல மாவட்ட நிா்வாகம் தடை விதித்து வருகிறது.
இந்த நிலையில், 2021-ஆம் ஆண்டின் முதல் பெளா்ணமி வியாழக்கிழமை (ஜன.28) அதிகாலை 1.45 மணிக்குத் தொடங்கி வெள்ளிக்கிழமை (ஜன.29) அதிகாலை 1.35 மணிக்கு முடிவடைகிறது.
கரோனா தொற்று காரணமாக, பெளா்ணமி கிரிவலம் செல்ல மாவட்ட நிா்வாகம் பக்தா்களுக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது.
அதனால், பக்தா்கள் கிரிவலம் செல்ல வரவேண்டாம் என்று மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி கேட்டுக்கொண்டுள்ளாா்.