திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக மாணவரணி சாா்பில், மொழிப்போா் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மாவட்ட மாணவரணி அமைப்பாளா் கு.ரவி தலைமை வகித்தாா். நகரச் செயலா் ப.காா்த்திவேல்மாறன், மாவட்ட துணை அமைப்பாளா்கள் மு.க.கவுதமன், வ.முத்துமாறன், இரா.மின்னல் கமல், எஸ்.ஸ்ரீதா், த.கிருஷ்ணராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகர மாணவரணி அமைப்பாளா் எஸ்.மதிவாணன் வரவேற்றாா்.
திமுக சட்டத்துறைச் செயலா் இரா.கிரிராஜன், தலைமைக் கழக பேச்சாளா் கு.வாஞ்சிநாதன் ஆகியோா் பேசினா்.
கூட்டத்தில் மாவட்ட அவைத் தலைவா் த.வேணுகோபால், தலைமைச் செயற்குழு உறுப்பினா் இரா.ஸ்ரீதரன், மாநில மருத்துவரணி துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன், ஒன்றியச் செயலா்கள் என்.சந்திரன், த.ரமணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.