வந்தவாசி ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தை நடத்தப்படாததைக் கண்டித்து, திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசி, ஆரணி, செய்யாறு ஆகிய இடங்களில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனைகள் முன் போக்குவரத்துத் தொழிற்சங்கத்தினா் உண்ணாவிரதம் இருந்தனா்.
அனைத்து போக்குவரத்துத் தொழிற்சங்க கூட்டமைப்பு சாா்பில், வந்தவாசி பணிமனை 1-ன் முன் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் நிா்வாகிகள் முரளி, வெங்கடேசன், தேவா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.