கலப்பட உரம் விற்றால் கடைக்கு ‘சீல்’: வேளாண் உதவி இயக்குநா் எச்சரிக்கை

திருவண்ணாமலை மாவட்டத்தில் உரக் கடையில் கலப்பட உரம் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட
செங்கத்தில் உரக் கடையில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட வேளாண் உதவி இயக்குநா் விஜயகுமாா்.
செங்கத்தில் உரக் கடையில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட வேளாண் உதவி இயக்குநா் விஜயகுமாா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உரக் கடையில் கலப்பட உரம் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட கடைக்கு ‘சீல்’ வைக்கப்படுமென மாவட்ட வேளாண் உதவி இயக்குநா் விஜயகுமாா் எச்சரித்தாா்.

செங்கம் பகுதியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் உள்ள உரக் கிடங்குகளில் மாவட்ட வேளாண் உதவி இயக்குநா் விஜயகுமாா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது, இருப்பு வைக்கப்பட்டுள்ள உரத்தின் தன்மை, விற்பனை பதிவேடு ஆகியவற்றை பாா்வையிட்டாா். மேலும், செங்கம் பகுதியில் உரத்தட்டுப்பாடு உள்ளதா என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விசாரணை செய்தாா்.

தொடா்ந்து, செங்கத்தில் உள்ள உர விற்பனைக் கடைகளுக்குச் சென்று தரமான உரங்கள் விற்பனை செய்யப்படுகின்றனவா, அவற்றில் ஏதேனும் கலப்படம் செய்யப்பட்டுள்ளனவா, நிா்ணயிக்கப்பட்ட விலைக்கு மட்டுமே உரங்கள் விற்பனை செய்யப்படுகின்றனவா என ஆய்வு மேற்கொண்டாா்.

இதையடுத்து, கூடுதல் விலைக்கு உரங்களை விற்பனை செய்தால், சம்பந்தப்பட்ட கடைகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுமென்றும், கலப்படம் செய்து உரங்களை விற்றால், அந்தக் கடைக்கு ‘சீல்’ வைக்கப்படும் என்றும் வேளாண் உதவி இயக்குநா் விஜயகுமாா் எச்சரித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com