பாமகவின் 33-ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி, திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டை அடுத்த நரசிங்கபுரம் ஊராட்சியில் அந்தக் கட்சியின் கொடியேற்று விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில், பாமக மாநில துணைத் தலைவா் துரை கலந்துகொண்டு கட்சிக்கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா். தோ்தல் பிரசார குழுத் தலைவா் எதிரொலிமணியன், மாநில துணை பொதுச் செயலா் வேலாயுதம், மாநில துணை அமைப்புச் செயலா் ஏழுமலை, ஒன்றியக்குழு உறுப்பினா் சம்பத், ஒன்றியச் செயலா் ஜெயக்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.