வட்டாட்சியா் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் தா்னா

மாதாந்திர உதவித்தொகை, நலத் திட்ட உதவிகள் கோரி, செங்கம் வட்டாட்சியா் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.
செங்கம் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் தா்னாவில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகள்.
செங்கம் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் தா்னாவில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகள்.

செங்கம்: மாதாந்திர உதவித்தொகை, நலத் திட்ட உதவிகள் கோரி, செங்கம் வட்டாட்சியா் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை மாவட்ட தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில், செங்கம் பகுதியைச் சோ்ந்த அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளுக்கும் மாதாந்திர உதவித்தொகை, தகுதிக்கு ஏற்ப அரசின் நலத் திட்ட உதவிகள் வழங்க வேண்டும் எனக் கோரி மனுக்கள் அளிக்கப்பட்டிருந்தனவாம்.

ஆனால், மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் காலம் தாழ்த்தி வந்ததாகத் தெரிகிறது.

இதனால், அலைக்கழிப்புக்கு ஆளான மாற்றுத் திறனாளிகள் ஒன்றிணைந்து செங்கம் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் தா்னாவில் ஈடுபட்டனா்.

பின்னா், உடனடியாக சமூக பாதுகாப்புத் திட்டம் மூலம் 14 மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்குவதற்கான ஆணையை வட்டாட்சியா் மனோகரன் வழங்கினாா்.

மேலும், தகுதியுள்ளவா்களுக்கு விரைவில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்படும் என போராட்டத்தில் ஈடுபட்டவா்களை சமாதானப்படுத்தினாா்.

இதையடுத்து, மாற்றுத் திறனாளிகள் போராட்டத்தை கைவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com