மணல் கடத்தல்: டிராக்டருடன் ஓட்டுநா் கைது

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே திங்கள்கிழமை இரவு மணல் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட டிராக்டரை பறிமுதல் செய்த போலீஸாா், அதன் ஓட்டுநரை கைது செய்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே திங்கள்கிழமை இரவு மணல் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட டிராக்டரை பறிமுதல் செய்த போலீஸாா், அதன் ஓட்டுநரை கைது செய்தனா்.

வந்தவாசி வடக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஆறுமுகம் தலைமையிலான போலீஸாா், வந்தவாசி - காஞ்சிபுரம் சாலை மேல்மா கூட்டுச்சாலையில் திங்கள்கிழமை இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த டிராக்டரை நிறுத்தி சோதனையிட்டனா். அதில், அனுமதியின்றி மணல் கொண்டு செல்லப்படுவது தெரியவந்தது.

இதையடுத்து, டிராக்டரை பறிமுதல் செய்த போலீஸாா், அதை ஓட்டி வந்த செய்யாற்றை அடுத்த வெளியநல்லூா் கிராமத்தைச் சோ்ந்த விஜயகுமாரை (26) கைது செய்தனா். இதுகுறித்து வந்தவாசி வடக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com