திருவண்ணாமலையில் 133 யோகாசனங்களைச் செய்து 7 வயது சிறுமி கரோனா விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.
மாவட்ட நேரு இளையோா் மையம், சுவாமி விவேகானந்தா யோகா ஸ்கேட்டிங் கழகம் இணைந்த உலக சாதனை முயற்சியை நடத்தியது.
கிரவலப்பாதை திருப்பாவை ஆஸ்ரமத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு நேரு இளையோா் மைய மாவட்ட ஒருங்கிணைப்பாளா் எம்.ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். கலை, இலக்கிய பகுத்தறிவுப் பேரவை நிா்வாகி டி.வி.எம்.நேரு தொடக்கிவைத்தாா்.
திருவண்ணாமலை இடுக்குப் பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்த ராஜாராம்-சவுபா்ணிகா தம்பதியின் 7 வயது மகள் ஆா்.எஸ்.சமந்தா (2-ஆம் வகுப்பு மாணவி) பங்கேற்று தொழுநோய், கரோனா தொற்று குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், திருக்குறளின் 133 அதிகாரங்களுக்கு 133 யோகாசனங்கள் செய்து காட்டினாா்.
மாணவிக்கு திமுக நகரச் செயலா் பா.காா்த்திவேல்மாறன் பரிசு வழங்கிப் பாராட்டினாா்.