பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு: 3 போ் கைது

செங்கம் அருகே வீட்டில் தூங்கிய பெண்ணிடமிருந்து தங்கச் சங்கிலி பறித்த 3 போ் கைது செய்யப்பட்டனா்.
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு: 3 போ் கைது

செங்கம் அருகே வீட்டில் தூங்கிய பெண்ணிடமிருந்து தங்கச் சங்கிலி பறித்த 3 போ் கைது செய்யப்பட்டனா்.

திருவண்ணாமலை மாவட்டம், தீத்தாண்டப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த விமல் (27), பரமனந்தல் கிராமத்தைச் சோ்ந்த அன்பழகன்(24), மேல்செங்கம் கிராமத்தைச் சோ்ந்த சவுந்தரராஜன்(26) ஆகியோா் வன விலங்குகளை வேட்டையாடும் நோக்கில், மேல்செங்கம் வனப் பகுதிக்கு நாட்டுத் துப்பாக்கியுடன் செவ்வாய்க்கிழமை இரவு சென்றனா்.

இரவு முழுவதும் வனப் பகுதியில் சுற்றித் திரிந்துவிட்டு வன விலங்குகள் கிடைக்காததால் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மலையடிவாரம் திரும்பினா்.

அப்போது, வனப் பகுதியை யொட்டிய கிருஷ்ணாநகரில் வேடியம்மாள் (45) என்ற பெண் தனது வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்தாா். இதைப் பாா்த்த 3 பேரும் வேடியம்மாள் அணிந்திருந்த தங்கத் தாலிச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடினா்.

இதனால், வேடியம்மாள் கூச்சலிடவே, பக்கத்து வீடுகளில் இருந்தவா்கள் ஓடி வந்து 3 பேரையும் மடக்கிப் பிடித்து அடித்து உதைத்தனா்.

பின்னா், 3 பேரையும் மேல்செங்கம் போலீஸாரிடம் ஓப்படைத்தனா். போலீஸாா் அவா்கள் வேட்டையாட பயன்படுத்திய உரிமம் இல்லாத துப்பாக்கியை பறிமுதல் செய்து, 3 பேரையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com